இந்திய கிளினிக் மருத்துவ சங்கத் தலைவர் பெனிஸ் ராஜா நாகர்கோவிலில் நேற்று அளித்த பேட்டியில், பாரம்பரிய மருத்துவர்களுக்கு அரசு பதிவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். பதிவு இல்லாததால் போலி மருத்துவர்கள் என நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். எந்த அரசியல் கட்சி பதிவு வழங்கும் அறிவிப்பை வெளியிடுகிறதோ, அந்த கட்சிக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆதரவு அளிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.














