திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் பங்குனித்திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான நேற்று மாலை, ஆதிகேசவப்பெருமாளும் கிருஷ்ணசாமியும் மூவாற்று முகத்தில் ஆறாட்டம் கண்டருளினர். துப்பாக்கி ஏந்திய போலீசார் மரியாதை செய்ய, திருவிதாங்கூர் ராஜ பிரதிநிதி முன் செல்ல, பக்தர்கள் புடைசூழ ஆற்றூர், தோட்டவாரம் வழியாக மூவாற்று முகத்தை அடைந்தனர். இரவு 8 மணிக்கு ஆறாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆற்றூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் புஷ்பாபிஷேக வரவேற்பு அளிக்கப்பட்டது.














