உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இன்று கும்பமேளா ஏற்பாடுகளை தொடங்கி வைக்கிறார் பிரதமர்

0
29

உ.பி.​யின் பிரயாக்​ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்​தில் ஆண்டு​தோறும் கும்​பமேளா நடைபெறுகிறது. 12 ஆண்டு​களுக்கு ஒரு முறை இந்த விழா, மகா கும்​பமேளாவாக நடத்​தப்​படு​கிறது.

ஜனவரி 13-ல் தொடங்கும் மகா கும்​பமேளாவுக்கு பிரம்​மாண்ட ஏற்பாடுகள் செய்​யப்​பட்​டுள்ளன. இந்த ஏற்பாடுகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்​கிறார். இதற்கு முன்பு கடந்த2019 கும்​பமேளா விழா​வில் பிரதமர் மோடி பங்கேற்​றார்.

தற்போது உ.பி. அரசு நடத்​தும் மகா கும்​பமேளா ஏற்பாடுகளை முதல் முறையாக பிரதமரே தொடங்கி வைக்​கிறார். முதல்வர் ஆதித்​யநாத் கலச கும்பத்தை பிரதமர் மோடி​யிடம் கொடுக்க உள்ளார். பண்டிதர் தீப்பு மிஸ்ரா தலைமை​யில் 7 முக்கிய மூத்த அர்ச்​சகர்கள் இதற்கான பூஜைகளை நடத்து​கின்​றனர். இதில் உலக அமைதிக்​காக​வும், மகா கும்​பமேளா சிறப்பாக நடைபெற​வும் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்​வார்.

மகா கும்​பமேளாவை புண்ணிய விழாவாக சர்வதேச அளவில் பிரபலப்​படுத்த மத்திய, மாநில அரசுகள் ஆர்வமாக உள்ளன. இந்நிலை​யில் அடுத்த ஆண்டு மகா கும்​பமேளா​வுக்கு மாநில அரசுடன் மத்திய அரசும் அதிக முக்​கி​யத்துவம் அளித்து வருகிறது. கலச கும்ப பூஜை​யில் அனைத்து அகாடாக்​களின் தலைவர்​கள், முக்கிய துறவிகள் மற்றும் மடாதிப​திகள் பங்கேற்​கின்​றனர். அவர்​களுடன் பிரதமர் மோடி கலந்​துரை​யாடு​கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here