யுபிஐ பரிவர்த்தனைக் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தாந்தி தனது எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் ஒருமுறை, “நீங்கள் இடதுசாரி கொள்கை கொண்டவரா அல்லது வலதுசாரி கொள்கை கொண்டவரா” என்று கேட்கப்பட்டபோது, நான் இடதுபுறமோ அல்லது வலதுபுறமோ சாய்வதில்லை. நான் நேராக நிற்கிறேன் என்று பதிலளித்தார்.
ஆனால் பிரதமர் மோடியின் அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டது. அவர் இடதுசாரியும் அல்ல, வலதுசாரியும் அல்ல. அவர் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன் மண்டியிட முடிவு செய்துள்ளார்.
யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிப்பதன் மூலமும், அமெரிக்காவுக்குப் பெருந்தொகையை வழங்குவதன் மூலமும் ஒவ்வொரு இந்தியர் மீதும் பிரதமர் வரியை சுமத்தியுள்ளார்.
எனவே, பிரதமர் மோடிஜி… இப்போதே யுபிஐ பரிவர்த்தனைக் கட்டணத்தை திரும்பப் பெறுங்கள். அமெரிக்காவிடம் சரண் அடைவதை இப்போதே பிரதமர் மோடி நிறுத்தி விடவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.














