தக்கலை அருகே குமாரகோவில் சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. இதில், சுமார் 130 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அனாஸ் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது.














