உள்நாட்டில் 100 நாளில் தயாரிக்கப்பட்ட ‘உக்கிரம்’ துப்பாக்கி சோதனை​கள் வெற்றி

0
20

 உள்​நாட்​டில் 100 நாளில் வடிவ​மைத்து தயாரிக்​கப்​பட்ட ‘உக்கிரம்’ துப்பாக்கி அனைத்து சோதனை​களை​யும் முடித்து மத்​திய ஆயுதப்​படைகளுக்​காக கொள்​முதல் செய்​யப்​பட​வுள்​ளது.

தெலங்​கா​னாவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறு​வனம் ‘த்​விப்​பா’. ராணுவம் மற்​றும் போலீ​ஸாருக்கு துப்​பாக்​கி​கள் தயாரிப்பதற்காக கடந்த 2018-ம் ஆண்டு ஹைத​ரா​பாத்​தில் தொடங்​கப்​பட்​டது. இந்​நிறு​வனம் கடந்த 2021-ம் ஆண்டு உரிமம் பெற்று இது​வரை 100-க்​கும் மேற்​பட்ட துப்​பாக்கி ரகங்​களை உருவாக்​கி​யுள்​ளது.

இந்​நிறு​வனத்​தில் யு-19 இயந்​திரத் துப்​பாக்​கி, இலகு ரக இயந்​திரத் துப்பாக்கி, யு-45, யு-39 ரைபிள்​கள், ட்ரோன் எதிர்ப்பு துப்பாக்கிகள் ஆகியவை தயாரிக்​கப்​படு​கின்​றன. இந்​நிலை​யில் ராணுவ ஆராய்ச்சி மேம்​பாட்டு நிறுவனம் (டிஆர்​டிஓ) மற்​றும் த்விப்பா நிறுவன​மும் இணைந்து ‘உக்​கிரம்’ 7.62 x 51 எம்​.எம் ரக துப்பாக்கியை வடிவ​மைத்து தயாரிக்​கும் முயற்​சி​யில் இறங்​கின. இது உள்நாட்டில் 100 நாட்​களில் வடிவ​மைக்​கப்​பட்டு உருவாக்கப்பட்டது.

இந்த துப்​பாக்கி ராணுவம் மற்​றும் உள்​துறை அமைச்​சகத்​தின் அனைத்து வித தரப் பரிசோதனை​களை​யும் நிறைவு செய்துவிட்டது. இதனால் உக்​கிரம் துப்​பாக்கி மத்​திய ரிசர்வ் போலீஸ் படை, இந்​தோ-​திபெத் எல்லை போலீஸ், சஷஸ்த்ரா சீமாபால் ​(எஸ்​எஸ்​பி) மற்​றும் தேசிய பாது​காப்பு படை (என்​எஸ்​ஜி) போன்ற மத்​திய ஆயுதப்​படைகளின் பயன்​பாட்​டுக்கு கொள்​முதல் செய்​யப்​பட​ உள்​ளது.

இது குறித்து த்விப்பா நிறு​வனத்​தின் நிர்​வாக இயக்​குனர் சிபி ஜோசப் அளித்த பேட்​டி​யில், “உக்​கிரம் துப்​பாக்கி 4 கிலோ எடைக்கும் குறை​வான​தாக தயாரிக்​கப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் 500 மீட்டர் தூரம் உள்ள இலக்​கு​களை சுட முடி​யும்” என்​றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here