கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின் முயற்சியில் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் பொது மக்களுடைய பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து நேசமணி நகர் காவல் நிலைய எல்லைக்குள் உட்பட்ட கிறிஸ்து நகர், ஜோதி தெரு ஆகிய பகுதிகளில் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் குறித்து உதவி காவல் ஆய்வாளர் ஜெசி மேனகா விழிப்புணர்வு செய்தார்.