கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட உள்ளது. கன்னியாகுமாரி சட்டமன்ற தொகுதி மட்டுமே அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நிர்வாகிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நேற்று நாகர்கோவில் வடசேரியில் அமைந்துள்ள எம். ஜி. ஆர் சிலை முன்பு மகளிர் சிலர் தளவாய் சுந்தரத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பாஜக மற்றும் அதிமுக இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.














