அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டு வரும் போதை மறுவாழ்வு மையங்கள் ஓரிரு மாதங்களில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் அரசு மனநல மருத்துவமனை உள்ளிட்ட 7 அரசு போதை மறுவாழ்வு மையங்கள் உள்ளன. இந்நிலையில், சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 25 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் 20 படுக்கைகள் கொண்ட போதை மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அமையும் மையங்களில் போதை பழக்கத்துக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் உளவியல் சிகிச்சை அளிக்கப்படும். இந்த மையங்கள் ஓரிரு மாதங்களில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது” என்றனர்.