இந்திய ஊடக சுதந்திரம் குறித்து நார்வே ஊடகங்கள் கேள்வி: மத்திய வெளியுறவு அமைச்சகம் காரசார பதில்

0
16

பிரதமரின் சுற்​றுப் பயணத்​தின்​போது செய்​தி​யாளர் சந்​திப்​பு​களில் கேள்​வி-ப​தில் நேரங்​கள் ஒதுக்கப்படாதது குறித்து நார்வே ஊடகங்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து மத்​திய வெளி​யுறவு அமைச்​சகம் பதில் அளித்​துள்​ளது.

நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோருடன் பிரதமர் மோடி நடத்திய கூட்டு ஊடகச் சந்​திப்​பின்போது, இரு தலை​வர்​களும் செய்​தி​யாளர்​களின் கேள்வி​களுக்​குப் பதிலளிக்க மாட்​டார்​கள் என்று அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இருப்​பினும், பிரதமர் மோடியை வழிஅனுப்​பிய பிறகு, நார்வே பிரதமர் அந்​நாட்டு ஊடகங்​களிடம் தனி​யாகப் பேசி​னார். இதுகுறித்​துப் பத்​திரி​கை​யாளர் ஸ்வெண்ட்சன் சமூக ஊடகத்​தில் அதிருப்தி வெளி​யிட்​டிருந்​தார்.

இதற்​குப் பதிலளித்த நார்​வே​யில் உள்ள இந்​தி​யத் தூதரகம், அன்று மாலை நடை​பெறவுள்ள செய்​தி​யாளர் சந்​திப்​பிற்கு வந்து தங்களின் கேள்வி​களைக் கேட்​கலாம் என்று அவருக்கு அழைப்பு விடுத்​திருந்​தது. அதன்​படி மாலை நடை​பெற்ற செய்​தி​யாளர் சந்திப்​பில், இந்​திய வெளியுறவு அமைச்சக அதி​காரி​யான சிபி ஜார்​ஜுக்​கும், பத்​திரி​கை​யாளர் ஸ்வெண்ட்​சனுக்​கும் இடையே வாக்​கு​வாதம் நடை​பெற்​றது.

பத்​திரி​கை​யாளர் அடுத்​தடுத்து குறுக்​கிட்ட போதி​லும், இந்தியாவின் தேர்​தல் முறை, அமை​தி​யான முறை​யில் நிகழும் ஆட்சி மாற்​றம் மற்​றும் இந்​திய அரசி​யலமைப்​புச் சட்​டம் வழங்கியுள்ள கருத்​துச் சுதந்​திரம், மதச் சுதந்​திரம் உள்​ளிட்ட அடிப்​படை உரிமை​களைச் சுட்​டிக்​காட்டி சிபி ஜார்ஜ் இந்​தி​யாவின் நிலைப்​பாட்டை தீர்க்​க​மாகப் பாது​காத்​துப் பேசி​னார். அப்​போது அவர் கூறிய​தாவது: நெதர்​லாந்து நாட்​டின் பயணத்​தின் போதும் பிரதமரின் செய்​தி​யாளர் சந்​திப்​பு​கள் குறித்து இது​போன்ற கேள்வி​கள் எழுப்​பப்​பட்​டது.

நாம் உலக மக்​கள் தொகை​யில் ஆறில் ஒரு பங்​காக இருக்கிறோம்; ஆனால் உலகப் பிரச்​சினை​களில் ஆறில் ஒரு பங்காக நாம் இல்​லை. இந்​தி​யா​வின் பிரம்​மாண்​டத்​தைப் பற்​றிப் பலருக்​குப் புரிதல் இல்​லை. ஏதோ சில அறி​யாமை​யுள்ள தொண்டு நிறு​வனங்​கள் வெளி​யிடும் ஒன்று அல்​லது இரண்டு அறிக்​கைகளைப் படித்​து​விட்டு வந்து இங்கு கேள்வி எழுப்புகிறார்கள். அதைப் பற்றி எங்​களுக்​குக் கவலை​யில்​லை. நாம் பல நூற்​றாண்​டு​களாக ஒரு ஜனநாயகச் சமூக​மாக வாழ்ந்து வரு​கிறோம். நம்​மிடம் உள்ள சகிப்​புத்​தன்மைதான் நம் பன்​முகத்​தன்​மைக்​குக் காரணம். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here