நித்திரவிளை: வாலிபரை வெட்டிய சிறுவன்; 3 பேர் அதிரடி கைது

0
219

இரவிபுத்தன்துறை குருசடிவளாகம் பகுதி சேர்ந்தவர் கபிரியேல் (19). சம்பவத்தின் இரவு 9.30 மணி அளவில் மைதானத்தில் கால்பந்து விளையாடிவிட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அவனை ஏன் தவறாக பேசினீர்கள்? என கேட்டு வெட்டுக்கத்தியால் கபிரியேலை வெட்டியுள்ளான். சிறுவனுடன் வந்த ஷாஜன் (27), சிலுவையப்பன் (71) ஆகியோர் கபிரியேலை தாக்கி விட்டு 3 பேரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் சிறுவன் உட்பட 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here