Home உலக செய்திகள் செங்கடலில் சரக்குக் கப்பல் மீது மர்மக் கும்பல் தாக்குதல்: பிரிட்டன் ராணுவம் தகவல்

செங்கடலில் சரக்குக் கப்பல் மீது மர்மக் கும்பல் தாக்குதல்: பிரிட்டன் ராணுவம் தகவல்

0

செங்​கடலில் ஏமன் நாட்டு கடற்​கரைக்கு அருகே சென்று கொண்​டிருந்த சரக்​குக் கப்​பல் ஒன்​று, அடையாளம் தெரி​யாத ஆயுதமேந்​திய மர்​மக் கொள்​ளை​யர் கும்பலால் தாக்​குதலுக்கு உள்​ளாகி​யிருப்​ப​தாக பிரிட்டன் ராணுவம் நேற்று தெரி​வித்​துள்​ளது.

ஏமனின் கடலோர நகர​மான ஹொடை​டா​விற்கு தென்​மேற்கே 30 கடல் மைல் (சு​மார் 55 கிலோமீட்​டர்) தொலை​வில் இத்​தாக்​குதல் நடந்​துள்​ள​தாக பிரிட்​டன் கடல்​சார் வர்த்தக நடவடிக்​கைகள் அமைப்பு தெரி​வித்​துள்​ளது. தங்​களுக்கு நேர்ந்த இந்​தத் தாக்​குதல் குறித்து கப்​பல் ஊழியர்​களே அதி​காரப்​பூர்​வ​மாகத் தகவல் தெரிவித்​துள்​ளனர்.

எனினும், பாதிக்​கப்​பட்ட கப்​பலின் பெயர், அதில் பயணித்தவர்கள் மற்​றும் சேத விவரங்​கள் குறித்த முழு​மை​யான தகவல்​கள் இன்​னும் வெளி​யாக​வில்​லை. இதுகுறித்த விசாரணைகள் தீவிர​மாக நடை​பெற்று வரு​கின்​றன. இந்​தத் தாக்குதலுக்கு நேற்று பிற்​பகல் வரை எந்​தவொரு ஆயுதக் குழு​வும் அதி​காரப்​பூர்​வ​மாகப் பொறுப்​பேற்​க​வில்​லை.

இந்த பகுதி ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்​சி​யாளர்களின் கட்​டுப்​பாட்​டில் உள்​ளது. ஏமனின் ஹவுதி கிளர்ச்​சி​யாளர்​கள் மீண்டும் கப்​பல்​கள் மீது தாக்​குதல் நடத்​தப் போவ​தாக எச்சரித்திருந்த போதி​லும், அவர்​கள் அதை இது​வரை செய்​த​தாக தகவல் இல்​லை.

கடந்த காலத்​தில் காசா போர் தொடங்​கிய​திலிருந்​து, செங்​கடல் பாப் அல்​-மந்​தாப் நீரிணையை ஒட்​டிய முக்​கிய நீர்​வழிப் பாதை பகு​தி​யில் ஹவு​தி​கள் பலமுறை ட்ரோன், ஏவு​கணை​கள் மூலம் சரக்கு கப்​பல்​களைத் தாக்​கி​யுள்​ளனர்.

இந்த தாக்​குதலால் பல கப்​பல் போக்​கு​வரத்து நிறு​வனங்​கள், சூயஸ் கால்​வாய் வழி​யாகச் செல்​வதற்​குப் பதிலாக, ஆப்பிரிக்காவின் குட் ஹோப் முனையை சுற்றி தங்​கள் கப்பல்களை மாற்றி அனுப்ப வேண்​டிய கட்​டா​யம் ஏற்​பட்​டது. இதற்​கிடை​யில், சோமாலிய கடற்​கொள்​ளை​யர்​களும்​ இந்​த கடற்பகு​திக்​கு அடுத்​துள்​ள ஏடன்​ வளை​கு​டா பகு​தி​களில்​ தங்களது கைவரிசையைக்​ ​காட்​டி வரு​கின்​றனர்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version