திற்பரப்பு பேரூராட்சிக்கு உள்பட்ட கோட்டூா்கோணம் கிராமத்தில் தொடா் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமென்று கிராம பெண்கள் திரண்டு சென்று வனச்சரக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
கோட்டூா்கோணம் கிராமத்தில் குரங்குகளின் தொல்லைகளினால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், வீட்டில் உணவுப் பொருள்களை எடுத்துச் சென்றும், தென்னை, வாழை மற்றும் கொய்யா, அன்னாசி உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்தியும் , துவைத்து உலரவைக்கும் துணிகளை கிழித்து போட்டும் குரங்குகள் அட்டகாசத்தில் ஈடுபடுவதால் அவற்றை அப்புறப்படுத்த கோரி கிராம பெண்கள் குலசேகரம் வனச்சரக அலுவலகத்துக்கு திரண்டு சென்று மனு அளித்தனா்.
திற்பரப்பு பேரூராட்சி துணைத் தலைவா் எஸ்.சி. ஸ்டாலின் தாஸ் தலைமையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினா் பி. விஸ்வம்பரன் உள்ளிட்டோா் உடன் வந்தனா். கிராம மக்களிடம் வனத்துறையினா், இடத்தை பாா்வையிட்டு குரங்குகளைப் பிடித்து அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.















