குழித்துறை ஆர்சி தெருவைச் சேர்ந்த ஜீன் தாமஸ் (32) மற்றும் அவரது மனைவி ஷெரினா (30) நேற்று முன்தினம் (ஏப்ரல் 28) பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, கல்லுத்தொட்டி அருகே வேகமாக வந்த கார் மோதி ஜீன் தாமஸ் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக கேரள மாநிலம் வைக்கம் பகுதியைச் சேர்ந்த பிரமோத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
