மத்திய அரசின் தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் கோவா மாநிலம் மபூசா பகுதியில் நடைபெற்றது. இதில் 17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, மேக்கோடு அரசு உயர்நிலைப் பள்ளியின் 7 ஆம் வகுப்பு மாணவர் ஆட்வின் ரிஜோ பங்கேற்று இரண்டாமிடம் பிடித்து வெற்றி பெற்றார். இந்த சாதனை மாணவரை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டி வாழ்த்தினர்.














