Home கன்னியாகுமரி செய்திகள் குமரி: பறக்கும் படையை சோதனை செய்த கலெக்டர்

குமரி: பறக்கும் படையை சோதனை செய்த கலெக்டர்

0

குமரி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 6 தொகுதிகளில் 8 மணி நேர சுழற்சி முறையில் 21 பறக்கும் படைகள் மற்றும் 24 நிலையான கண்காணிப்பு படைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் படைகள் சரியாகப் பணிகளைச் செய்கின்றனவா என்பதைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். பறக்கும் படையினர் ஆவணங்களைச் சரியாகச் சரிபார்த்து, வீடியோ பதிவுகளுடன் ஆய்வு செய்ய வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version