சென்னையில் நடைபெற்று வரும் 23-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் பிரிவுகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். இதன் மூலம், 2026 ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெறும் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். எஸ்ஐ திலீபனை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.














