குளச்சல் பகுதியைச் சேர்ந்த லுக்மானுல் ஹக்கீம் என்பவரின் மகள்கள் ஆதிலா (15) மற்றும் ஆசின் (10) ஆகியோர் அரபி வகுப்பு முடிந்து வீடு திரும்பும்போது, அதே பகுதியைச் சேர்ந்த விபின் (42) என்பவர் தனது பைக்கில் அதிக ஒலி எழுப்பி அவர்களை அச்சமூட்டியுள்ளார். சிறுமி ஆசின் தட்டி கேட்டதால், விபின் அவரை கன்னத்தில் அறைந்து துரத்தியுள்ளார். இதில் காயமடைந்த ஆசின் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக குளச்சல் போலீசார் விபின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
