குளச்சல் துறைமுக தெருவில் உள்ள ஐஸ் கம்பெனியில் நேற்று அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இன்ஜாமுன் (23) என்ற தொழிலாளி பணியில் இருந்தபோது, அவரது வலது கால் ஐஸ் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கியது. உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தொழிலாளியை மீட்டனர். பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மூலம் குளச்சல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.














