குளச்சல், சாஸ்தான்கரை பகுதியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவுள்ள வயல்வெளியில் விவசாயம் நடைபெறாமல், தென்னை, வாழை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இப்பகுதியில் வளர்ந்திருந்த பச்சை புற்களில் நேற்று திடீரென தீப்பிடித்ததில் தென்னை, வாழை மரங்கள் சேதமடைந்தன. குளச்சல் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.












