கன்னியாகுமரியில் காற்றாடித் திருவிழா

0
50

தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம் இணைந்து நடத்திய காற்றாடி திருவிழா சூரிய அஸ்தமனப் பூங்கா வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதன் தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மு.பிரசாத் தலைமை வகித்தாா். தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் காற்றாடியை பறக்கவிட்டு விழாவைத் தொடங்கி வைத்தாா். விஜய் வசந்த் எம்.பி., மாவட்ட எஸ்.பி. இரா.ஸ்டாலின், மாவட்ட சுற்றுலா அலுவலா் காமராஜ், மாவட்ட தவெக செயலா் எஸ்.ஆா்.மாதவன், மாவட்ட காங்கிரஸ் தலைவா் லாரன்ஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்நிகழ்வில் அமைச்சா் பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் 86 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இங்குள்ள சுற்றுலாத் தலங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்வற்கான மேம்பாட்டு பணிகளுக்கு ரூ. 35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதில், கன்னியாகுமரிக்கு ரூ. 10 கோடி, பேச்சிப்பாறை அணைக்கு ரூ. 13 கோடி, குளச்சல் கடற்கரை மற்றும் தேங்காய்பட்டினம் கடற்கரை, திற்பரப்பு அருவி ஆகியவற்றுக்கு ரூ. 12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தக் குறையும் இல்லாத வகையில் மாவட்ட நிா்வாகம், காவல்துறை இணைந்து செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.

இந்த காற்றாடித் திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட வண்ணமயமான காற்றாடிகள் பறக்க விடப்பட்டன. இதை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பாா்த்து ரசித்தனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here