நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் உதவும் கரங்கள் அமைப்பு சார்பில் இயன்றவரை இயலாதர்க்கு உதவும் விதமாக எல்லா மாதமும் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை இல்லங்களில் சென்று நல உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று 72 குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மதிப்பில் நல உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் ஜெயன் தலைமை வகித்தார். செயலாளர் சுகன்யா, பொருளாளர் சஜின் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் மகேஷ் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.














