இரணியல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆளூர் பகுதியில் மது விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் ரோந்து சென்றனர். தோப்புவிளை பகுதியில் பபிலா என்ற பெண் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் அவரது வீடு சோதனை செய்யப்பட்டது. அப்போது, அரசு அனுமதி இன்றி 85 குவாட்டர் மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் மதுபானங்களை பறிமுதல் செய்து, பபிலாவை கைது செய்தனர்.














