காசா பகுதியை நிர்வகிப்பதில் ஏற்பட்ட மோதலில் 8 பேரை சுட்டுக்கொன்ற ஹமாஸ் குழுவினர்

0
16

இஸ்​ரேல்​-​காசா அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தான நிலை​யில் ஹமாஸ் குழு​வினர் நேற்று 8 பேரை சுட்​டுக்​கொன்​றுள்​ளனர்.

இஸ்​ரேல் ராணுவத்​துக்​கும் பாலஸ்​தீனத்​தின் காசா பகு​தியை ஆட்சி செய்த ஹமாஸ் குழு​வினருக்​கும் இடையே 2 ஆண்​டு​களாக போர் நடை​பெற்​றது. அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் முயற்​சி​யால் இரு தரப்​பினர் இடையே கடந்த 9-ம் தேதி அமைதி உடன்​பாடு ஏற்​பட்​டது. 13-ம் தேதி எகிப்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்​றும் எகிப்து அதிபர் அல் சிசி தலை​மை​யில் நடை​பெற்ற காசா அமைதி உச்சி மாநாட்​டில் அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

ஹமாஸ் குழு​வினர் ஆயுதங்​களை துறந்து காசா பகு​தியி​லிருந்து வெளி​யேற வேண்​டும், காசா பகு​தியை நிர்​வகிக்க சர்​வ​தேச அளவி​லான ஒரு குழு உரு​வாக்​கப்​படும் என்பன உள்​ளிட்ட 20 அம்​சங்​கள் அந்த ஒப்​பந்​தத்​தில் இடம்​பெற்​றுள்​ளன. ஆனால், காசா பகு​தியை விட்டு வெளி​யேறு​வது உள்​ளிட்ட சில அம்​சங்​களை ஹமாஸ் ஏற்​க​வில்​லை.

இந்​நிலை​யில், ஒப்​பந்​தப்​படி இஸ்​ரேல் படை​யினர் வெளி​யேறியதும் காசா பகு​தியை ஹமாஸ் குழு​வினர் தங்​கள் கட்​டுப்​பாட்​டில் கொண்​டு​வந்​தனர். சாலை​யில் அவர்​கள் ரோந்து பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். இதனிடையே, காசா பகு​தியை கட்​டுக்​குள் கொண்​டு​வரு​வது தொடர்​பாக ஆயுதம் ஏந்​திய பாலஸ்​தீனக் குழுக்​களுக்​கும் ஹமாஸ் குழுக்​களுக்​கும் இடையே நேற்று மோதல் ஏற்​பட்​டது. இது தொடர்​பான வீடியோ காட்​சிகள் சமூக ஊடகங்​களில் பகிரப்​பட்டு வரு​கிறது. அதில், கண்​கள் கட்​டப்​பட்ட நிலை​யில் 8 பேர் சாலை​யில் மண்​டி​யிட்​டிருக்க, ஹமாஸ் குழு​வினர் அவர்​களை துப்​பாக்​கி​யால் சுட்​டுக் கொலை செய்​கின்​றனர். அப்​போது ஹமாஸ் குழு​வினர், “அல்​லாஹு அக்​பர், இவர்​கள் குற்​ற​வாளி​கள், இஸ்​ரேலுக்கு ஆதர​வாக செயல்​பட்​டனர்” என கூறுகின்​றனர்.

ட்ரம்ப் எச்​சரிக்கை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்​போது, “ஹமாஸ் குழு​வினர் மிக​வும் மோச​மான 2 குழு​வின் உறுப்​பினர்​களை கொன்​றுள்​ளனர். இந்த செயல் என்னை பாதிக்​க​வில்​லை. அதே​நேரம் ஹமாஸ் குழு​வினர் ஆயுதங்​களை கைவிட வேண்​டும். அவ்​வாறு செய்​ய​வில்லை என்​றால், நாங்​கள் ஆயுதங்​களை துறக்க வைப்​போம். அது விரை​வாக நடக்​கும்” என்​றார். இதனிடையே, ஒப்​பந்​தப்​படி கொலை செய்​யப்​பட்ட இஸ்​ரேல் பிணைக் கைதி​களின் உடலை ஒப்​படைக்கா விட்​டால், காசா பகு​திக்கு நிவாரணப் பொருட்​கள் செல்​லும் வாக​னங்​களில் பாதியை அனு​ம​திக்க மாட்​டோம் என இஸ்​ரேல் எச்​சரிக்கை விடுத்​தது. இதையடுத்​து, ஹமாஸ் குழு​வினர் நேற்று முன்​தினம் மேலும் 4 பிணைக் கைதி​களின் உடலை செஞ்​சிலுவை சங்​கத்​திடம் ஒப்​படைத்​தனர். இதில் ஒரு​வரின் உடல் தங்​களு​டைய பிணைக்​ கைதி இல்​லை என இஸ்​ரேல்​ நேற்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here