இந்திய வீரர்களுக்கு உடற்தகுதி தேர்வு

0
9

உள்நாட்டு சீசனுக்கு முன்னதாக பிசிசிஐ-யின் ஒப்பந்த பட்டியலில் உள்ள முன்னணி கிரிக்கெட் வீரர்கள், தங்களது உடற்தகுதித் தேர்வில் பங்கேற்பதற்காக நேற்று பெங்களூருவில் உள்ள பிசிசிஐ உயர் செயல்திறன் மையத்துக்கு வந்திருந்தனர்.

இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்த 48 மணிநேரத்துக்குள் இந்த உடற்தகுதி தேர்வு நடைபெற்றது.

மூத்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த், தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருடன் டி20 கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், டி20 ஸ்பெஷலிஸ்ட்களான ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட பல வீரர்கள் உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்த கட்டாய உடற்தகுதித் தேர்வில் ‘ப்ராங்கோ டெஸ்ட்’, 2 கி.மீ ஓட்டம், யோ-யோ டெஸ்ட் மற்றும் விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவது போன்ற பயிற்சிகள் இடம் பெற்றன. வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு தற்காலிகமாக விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

பிசிசிஐ-யின் உள்நாட்டு சீசன் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் தொடங்கும். இந்த ஆண்டு டெல்லியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடருடன் இந்த சீசன் தொடங்குகிறது. இதற்கிடையே, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது தொடைப் பகுதியில் லேசான தசைப்பிடிப்பு ஏற்பட்ட வேகப்பந்து வீச்சாளரான பிரின்ஸ் யாதவ், தற்போது முழு உடற்தகுதி பெற்று அணித்தேர்வுக்குத் தயாராக உள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here