நாகர்கோவில் மாநகராட்சி ஒழுகினசேரி பகுதியிலுள்ள 18 ஏக்கர் பரப்பளவிலான செம்மாங்குளம், 100 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகளை நேற்று மாவட்ட ஆட்சியர் பிரதாப் கொட்டும் மழையிலும் நேரில் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரசாந்த் கிருஷ்ணா, அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர் அக்சயா கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
