பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பிஎன்பி கட்சி: இந்தியா உடனான உறவைப் பேண விருப்பம்!

0
163

வங்கதேசப் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி), பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது. 

இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அதிகாரபூர்வச் செய்திக் குறிப்பில், வரும் காலங்களில் இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான மற்றும் ஆழமான உறவை வளர்த்தெடுக்க ஆவலுடன் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, பிஎன்பி கட்சியின் செயல் தலைவர் தாரிக் ரஹ்மானைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் வரலாற்று ரீதியான மற்றும் கலாச்சார ரீதியான உறவுகளைப் பேணுவதில் இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பதிவிட்டுள்ள பிஎன்பி கட்சி, “தாரிக் ரஹ்மானின் தலைமையிலான எங்களது வெற்றியை அங்கீகரித்த பிரதமர் மோடிக்கு நன்றிகள். இந்த வெற்றி வங்கதேச மக்கள் உங்கள் தலைமையின் மீது வைத்துள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.

வங்கதேச மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளது. 

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here