Home தேசிய செய்திகள் பிஹார் மாநில அமைச்சரவை நாளை விரிவாக்கம்: பிரதமர் மோடி பங்கேற்பு

பிஹார் மாநில அமைச்சரவை நாளை விரிவாக்கம்: பிரதமர் மோடி பங்கேற்பு

0

பிஹாரில் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக கூட்​ட​ணி​யில் முதல்​வர் நிதிஷ் கு​மார் மாநிலங்​களவை எம்​.பி.​யா​னார். இதனால் முதல்​வ​ராக பாஜக மூத்த தலை​வர் சாம்​ராட் சவுத்ரி பிஹாரின் புதிய முதல்​வ​ராக பதவி​யேற்​றார்.

ஐக்​கிய ஜனதா தளத்​தைச் சேர்ந்த பிஜேந்​திர பிர​சாத் யாதவ், விஜய் குமார் சவுத்ரி ஆகியோர் துணை முதல்​வர்​களாகப் பதவியேற்​றனர். இந்த சூழலில் பிஹார் அமைச்​சரவை நாளை விரி​வாக்​கம் செய்​யப்​படு​கிறது.

பாஜகவை சேர்ந்த 12 பேர், ஐக்​கிய ஜனதா தளத்​தைச் சேர்ந்த 11 பேர், லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) கட்​சியை சேர்ந்த 2 பேர், இந்துஸ்தானி அவாம் மோர்ச்​சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்சிகளை சேர்ந்த தலா ஒரு​வருக்கு அமைச்​சர் பதவி வழங்கப்பட இருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. பிஹார் தலைநகர் பாட்​னா​வில் புதிய அமைச்​சர்​கள் பதவி​யேற்பு விழாவை நடத்த ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு வரு​கின்​றன.

இது குறித்து பிஹார் பாஜக தலை​வர் சஞ்​சய் சரோகி கூறும்​போது, ”மே 7ம் தேதி நடை​பெறும் ​அமைச்​சரவை விரி​வாக்​க ​விழா​வில் பிரதமர் மோடி, தேசிய தலை​வர் நிதின் நவீன், அமைச்​சர் அமித் ஷா உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​க உள்​ளனர்​” என்​றார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version