கேரள மாநில எல்லைப் பகுதியில் உள்ள தனியார் மது பார் அருகே குப்பை கிடங்கில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட அருமனை பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (60) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 60% தீக்காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. மது போதையில் குப்பை தீயில் விழுந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.














