நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் செல்போன் திருடிய வாலிபர்கள்

0
261

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் நேற்று இரவு தீபாவளி பண்டிகையையொட்டி கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி இரண்டு இளைஞர்கள் பயணிகளிடமிருந்து செல்போனை திருடியுள்ளனர். செல்போன் திருடிய இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here