ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘திருக்குறள்’. இதன் தொடர்ச்சியாகத் ‘திருக்குறள்’ படத்தில் இடம்பெறாத கருத்துகளை வலியுறுத்தி இப்படத்தின் 2ம் பாகம் தயாராகிறது.
விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் வழங்க, ரமணா கம்யூனிகேஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படம் ஆங்கிலத்தில் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹிந்துஸ்தான்’ என்ற பெயரில் உருவாகிறது. முதல் பாகத்தில் நடித்த கலைச் சோழன், தன லட்சுமி ஆகியோர் இதிலும் வள்ளுவன்- வாசுகியாக நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியது.
இயக்குநர் ஏ.ஜே.பாலகிருஷ்ணன் கூறும்போது, “இப்படத்தில், திருவள்ளுவர் காலத்தின் கலாச்சாரத் தொடர்புகள், வணிகத் தொடர்பு, தமிழர்களின் சங்ககால நாகரீகம் படமாக்கப்பட உள்ளது. சர்வதேசப் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் ஹாலிவுட் கலைஞர்களின் பங்களிப்பும், ஏ.ஐ. தொழில் நுட்பமும் பயன்படுத்தப்பட உள்ளன. தமிழ்ப் பண்பாட்டைத் திருக்குறள் வாயிலாக, உலகுக்குப் பறை சாற்றுவதே இதன் நோக்கம்” என்றார்.















