“நம்​மைப் பிடிக்​காதவர்​களுக்கு என்ன செய்தாலும் பிடிக்​காது” – ‘தர்மன்​’ பூஜை​யில் ரஜினி​காந்த் பேச்சு

0
23

நடிகர் ரஜினி​ காந்​தின் 173-வது படத்தை கமல் ​ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்​டர்​நேஷனல் தயாரிக்​கிறது. ஆர்​.மகேந்​திரன் இணை தயாரிப்பு செய்​கிறார். இப்​படத்தை முதலில் சுந்​தர்.சி இயக்​கு​வ​தாக இருந்​தது. கதை பிரச்​சினை காரண​மாக அவர் விலகியதை அடுத்​து, சிபி சக்​கர​வர்த்தி இயக்​கு​வ​தாக அறிவிக்கப்பட்​டது.

அவரும் வில​கியதை அடுத்து ‘ஓ மை கடவுளே’, ‘டி​ராகன்’ படங்களை இயக்​கிய அஸ்​வத் மாரி​முத்து இயக்​கு​வ​தாகச் செய்திகள் வெளி​யாகின. இந்​நிலை​யில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்​ளது. இப்​படத்​துக்கு ‘தர்​மன்’ என பெயரிடப்பட்​டுள்​ளது. இதில் சிம்​ரன், ராஷி கன்னா ஆகியோர் நடிக்​கின்​றனர். அனிருத் இசையமைக்​கிறார். இப்​படத்​தின் தொடக்க விழா சென்​னை​யில் நடை​பெற்​றது.

விழா​வில் நடிகர் ரஜினி​காந்த் பேசி​ய​தாவது: பேச அழைப்​ப​தாகச் சொன்​னாலே தயக்​க​மாக இருக்​கிறது. ஏனென்​றால் நான் பேசினாலே ‘பி​ராப்​ளம்​’​தான். எனக்​கும் பிரச்​சினை, மற்றவர்களுக்கும் பிரச்​சினை. ஏதாவது கிளப்​பிக் கொண்டே இருப்​பார்​கள். நான் சும்மா இருந்​தால் இவர் என்ன பேசவே மாட்டேங்​கிறார் என்​பார்​கள். வாயில் கொழுக்​கட்டை வைத்​திருக்கிறா​ரா ? என கிண்​டல் செய்​வார்​கள். சரி என்று பேசி​னால், ‘இப்​போது வந்து பேசு’ என்று சிலரும், ‘இவர் பேசி​யிருக்​கக் கூடாது’ என்று சிலரும் சொல்​கிறார்​கள்.

ரொம்ப நாள் கழித்து நான் தெரிந்​து​கொண்​டது நம்​மைப் பிடிக்காதவர்​களுக்கு நாம் என்ன செய்​தா​லும் என்ன பேசி​னாலும் பிடிக்​காது. பிடித்​தவர்​களுக்கு நாம் என்ன செய்​தா​லும் பேசினாலும் பிடிக்​கும் என நினைப்​பது முட்​டாள்​தனம். ஜாக்கிரதை​யாக இருக்க வேண்​டும். ‘சி​வாஜி’ படத்​துக்கு பிறகு ராஜ் கமல் நிறு​வனத்​துக்கு நான் ஒரு படம் செய்​வ​தாக இருந்​தது. அது தள்​ளிப்​போனது. இப்​போது சேர்ந்​துள்​ளோம்.

இந்​தப் படத்​துக்கு அஸ்​வத் மாரி​முத்து 4-வது இயக்​குநர். முதலில் கே.எஸ்​.ரவி​கு​மார் இயக்​கு​வ​தாக இருந்​தது. பின் சுந்​தர். சி வந்தார். அவருக்கு வேறு படங்​கள் இருந்​த​தால் தாமத​மானது. சிபி சக்​கர​வர்த்​தி​யின் கதை அரு​மை​யாக இருந்​தது. கொஞ்​சம் சென்சிட்​டிவ். அந்​தக் கதைக்கு நிறைய நாள் தேவைப்​படும் என்பதால் பிறகு செய்து கொள்​ளலாம் என்று முடி​வெடுத்​தோம். அப்​போது ​தான் அஸ்​வத் மாரி​முத்து உள்ளே வந்​தார். ‘ரஜினி நான் கதை கேட்க மாட்​டேன். எல்​லாத்​தை​யும் உங்​களிடமே விட்​டு​விட்டேன்’ என்று கமல் கூறி​விட்​டார். எனக்கு டென்​ஷ​னாகி​விட்​டது. எல்லா பொறுப்​பை​யும் என்​னிடம் கொடுத்​து​விட்​டார். ஆனால் நான் தான் அவரை கட்​டாயப்​படுத்தி இந்​தக் கதையைக் கேட்க வைத்​தேன். அஸ்​வத் மாரி​முத்துக்கு பெரிய பொறுப்பு இருக்​கிறது. இந்​தப் படம் நன்​றாக வரும்.

எனக்​கும் கமலுக்​கும் இருக்​கிற நட்பை எவ்​வளவு சொன்​னாலும் அது குறை​வாகத்​தான் இருக்​கும். என் சினிமா கேரியரில் ‘இளமை ஊஞ்​சலாடு​கிறது’ வெற்​றியைத் தந்த படம். அதில் முதலில் நான் நடிப்​ப​தாகவே இல்​லை. அதில் நடிக்க இருந்​தது ஜெய்​ கணேஷ் தான். கமல் தான் இதில் ரஜினி நடித்​தால் நன்​றாக இருக்​கும் என்று இயக்​குநரிடம் பரிந்​துரை செய்​தார். கமலால் தான் ‘இளமை ஊஞ்​சலாடு​கிறது’ படத்​தில் நடிக்​கும் வாய்ப்பே கிடைத்​தது. இதுபோல கமல் எனக்​குச் செய்த உதவி​களைச் சொல்​லிக் கொண்டே போகலாம். இவ்​வாறு ரஜினி​காந்த் கூறி​னார். பின்னர் முதல்வர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறவில்லையே என்று கேட்டதற்கு அவரிடம் தெரிவித்து விட்டேன் என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here