கோயில்களில் சிறப்பு கட்டண தரிசனத்துக்கு எதிராக வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

0
24

விஸ்வ இந்து பரிஷத் வட தமிழ்​நாடு பிரிவு தலை​வர் பி.சொக்​கலிங்​கம் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் இந்து சமய அறநிலை​யத்துறை கட்​டுப்​பாட்​டில் உள்ள கோயில்​களில், கூட்ட நெரிசலை கட்​டுப்​படுத்​த ரூ.500 வரை பணம் வசூலித்​து, சிறப்பு கட்டண தரிசன முறை அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

மூத்த குடிமக்​கள், மாற்​றுத் திற​னாளி​கள், கர்ப்​பிணி பெண்​கள், புதுமண தம்​ப​தி​கள், மாநில ஆளுநர்​கள், முதல்​வர்​கள், மடா​திப​தி​கள், ஜீயர்​களை இலவச சிறப்பு தரிசனத்​துக்கு அனு​ம​திக்​கலாம்.

பணத்​தின் அடிப்​படை​யில் பாரபட்​சம் காட்​டும் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்​கும்​படி இந்து சமய அறநிலை​யத் துறைக்கு உத்​தர​விட மனு​வில் கோரி​யுள்​ளார்.

வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், வி.லட்சுமி நாராயணன், மனுவுக்கு பதிலளிக்​கும்​படி தமிழக அரசுக்கு உத்​தர​விட்​டு, வி​சா​ரணையை மே 29-ம் தேதிக்​கு தள்​ளி​வைத்​தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here