கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ரேஷன் அரிசி சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்படுகிறது. நேற்று கும்பகோணத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் 2500 டன் ரேஷன் அரிசி நாகர்கோவில் சந்திப்பு நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து அவை லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.















