செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் 171 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
மேலும், நடப்பாண்டில் கூடுதலாக நெல் பயிரிட்டு அறுவடை செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்து வைத்துள்ள நெல்லை விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பல நாட்கள் காத்திருந்து நெல் வழங்கும் நிலை உள்ளது. தற்போது, திடீரென மழை பெய்வதாலும்,
மழைப்பொழிவு ஏற்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், அறுவடை செய்து வந்துள்ள நெல், கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து சேதமடையாத வகையில், விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.















