தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் குமரியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படுகின்றன. வேட்பாளர்களின் முகவர்கள் கடுமையான சோதனைக்கு பிறகு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். வாக்கு எண்ணும் மையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.















