கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று மாலை காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், கடந்த 2025-26 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏவிஎம் கால்வாயை முழுமையாக சீரமைக்க ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது தடையில்லா சான்று பெறும் வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும், சான்று பெற்றவுடன் பணிகள் உடனடியாக தொடங்கும் என்றும் பிரச்சாரம் செய்தார். அவருடன் காங்கிரஸ், திமுக கூட்டணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.














