தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக நுழைவாயில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட புதுக்கடை போலீசார், அரசால் தடை செய்யப்பட்ட 10 கிராம் கஞ்சாவுடன் ஜாண் டேனியல் (34) என்ற வாலிபரை கைது செய்தனர். வேங்கோடு பகுதியை சேர்ந்த இவர் பெங்களூரில் வசித்து வருவது தெரியவந்துள்ளது. கஞ்சாவை எங்கிருந்து, எதற்காக கொண்டு வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.














