20 தொகுதி வேட்புமனுக்கள் நிராகரிப்பு: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் வேல்முருகன் புகார்

0
22

தமிழகத்​தில் 20 தொகுதி வேட்​பாளர்​களின் மனுக்​களை நிராகரித்த, தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை தலை​மைச் செயல​கத்​தில், தலைமை தேர்​தல் அதி​காரி​யிடம் தவாக தலை​வர் வேல்​முரு​கன் நேற்று புகார் மனு அளித்தார்.

பின்​னர் அவர் கூறியதாவது: தேர்​தல் ஆணை​யத்​தின் உத்​தர​வுக்கு இணங்க மூத்த வழக்​கறிஞர்​களின் ஆலோ​சனை​​படி, உரிய ஆவணங்​களு​டன் வேட்பு மனுக்​களை தாக்​கல் செய்​திருந்​தோம். தேர்தல் நடத்​தும் அலு​வலர்​கள் திமுக, அதி​முக, பாஜக கட்​சிகள் துணையோடு, 20 வேட்​பாளர்​களின் வேட்பு மனுக்​களை நிராகரித்​துள்​ளனர்.

திருப்​போரூர், சிதம்​பரம், ஓசூர், ராம​நாத​புரம், மதுர​வாயல், குன்​னூர், குளித்​தலை, பழனி, பொள்​ளாச்​சி, தாராபுரம், மதுரை மத்​திய தொகு​தி, கள்​ளக்​குறிச்​சி, பெரியகுளம் உள்​ளிட்ட 20 தொகு​தி​களில் வேட்​புமனு தாக்​கல் செய்த வேட்​பாளர்​களின் வேட்​புமனுக்​கள் தள்​ளு​படி செய்​யப்​பட்​டுள்​ளன.

20 தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​களும் சட்​டத்​துக்கு புறம்​பாக வேட்​புமனுக்​களை நிராகரித்​துள்​ளனர். எனவே கூடு​தல் தலை​மைச் செயலர் மூல​மாக விசா​ரணை நடத்​தி, எங்​கள் வேட்​பாளர்​களின் மனுக்​களை வாங்​கி, ஏப்​.9-ம் தேதி வெளி​யாகும் வேட்​பாளர்​கள் பட்​டியலில் இடம்​பெற நடவடிக்கை எடுக்க வேண்​டும். தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள் மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here