மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர் சுரேஷின் மகள், 19 வயது கல்லூரி மாணவி அசினா, கடந்த 28ஆம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். இது குறித்து அசினாவின் தாயார் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 1) அசினா தனது காதலன் ஷாஜனுடன் (23) குளச்சல் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். போலீசார் இருவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்து, காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, மாணவியை அவரது காதலனுடன் அனுப்பி வைத்தனர்.














