களியக்காவிளை போலீசார் நேற்று பேருந்து நிலையத்தில் சோதனை நடத்தியபோது, ஆட்டோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 26 பாட்டில் மதுபானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மதுபானங்களை பறிமுதல் செய்த போலீசார், கேரளா மாநிலம் பாறசாலை, இஞ்சி விளை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஷமீர் (39) என்பவரைக் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.














