தரைவழி தாக்குதலை நடத்துவதற்காக ஈரானுக்குள் நுழைய தயார் நிலையில் அமெரிக்க ராணுவ வீரர்கள்

0
24

ஈ​ரான் மீது தரைவழி​யாக தாக்​குதல் நடத்த அமெரிக்க ராணுவம் தயா​ராகி வரு​கிறது. அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வரு​கிறது.

இந்த போரில் ஈரானின் ராணுவ தளங்​கள், அணு சக்தி தளங்​கள், எண்​ணெய் வயல்​கள் என 10,000-க்​கும் மேற்​பட்ட இடங்​கள் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் வான்​வழி தாக்​குதல்​களை நடத்தி உள்​ளன. இதற்கு பதிலடி​யாக இஸ்​ரேல் மற்​றும் மத்​திய கிழக்கு நாடு​களில் உள்ள 20-க்​கும் மேற்​பட்ட அமெரிக்க ராணுவ தளங்​கள் மீது ஈரான் ராணுவம் தொடர்ச்​சி​யாக தாக்​குதல் நடத்தி வருகிறது. மேலும் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கச்சா எண்​ணெய் கப்​பல் போக்​கு​வரத்தை ஈரான் முடக்கி உள்​ளது.

போரை முடிவுக்கு கொண்டு வர 15 அம்ச திட்​டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்​மை​யில் முன்​மொழிந்​தார். இதை ஈரான் ராணுவம் ஏற்​க​வில்​லை. இதைத் தொடர்ந்து இருதரப்​புக்​கும் இடையே போர் தீவிரமடைந்​திருக்​கிறது. மத்​திய கிழக்கு நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்​களில் சுமார் 45,000 வீரர்​கள் உள்ளனர்.

மேலும் அமெரிக்க கடற்​படை​யின் 16 போர்க்​கப்​பல்​கள் அங்கு முகாமிட்டு உள்​ளன. புதி​தாக யுஎஸ்​எஸ் ட்ரிபொலி, யுஎஸ்​எஸ் சான் டியாகோ, யுஎஸ்​எஸ் நியூ ஓர்​லியன்ஸ் ஆகிய 3 போர்க்​கப்​பல்​கள் கடந்த சனிக்​கிழமை மத்​திய கிழக்கு பகு​தியை வந்​தடைந்​தன. இதில் ட்ரிபொலி போர்க்​கப்​பலில் உள்ள 3,500 வீரர்​கள் கடல், வான், தரை வழி போரில் திறன் வாய்ந்​தவர்​கள் ஆவர். இந்த போர்க்​கப்​பலில் கடல் மற்​றும் தரை​யில் செல்​லக்​கூடிய படகு​கள் உள்​ளன.

மேலும் பாராசூட் மூலம் தரை​யில் இறங்​கும் திறன் கொண்ட வீரர்​கள் உள்​ளனர். போர்க்​கப்​பலின் மேல்தளத்தில் 33 போர் விமானங்​கள், ஹெலி​காப்​டர்​கள் தயார் நிலை​யில் நிறுத்​தப்​பட்டு உள்​ளன. ட்ரிபொலி போர்க்​கப்​பல் மூலம் ஈரான் மீது தரைவழி தாக்​குதலை தொடங்க திட்​ட​மிடப்​பட்டு இருக்​கிறது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவ தலை​மையக​மான பென்டகன் வட்​டாரங்​கள் கூறிய​தாவது: ஈரான் மீது இறுதியாக தரைவழி தாக்​குதலை நடத்த திட்​ட​மிடப்​பட்டு இருக்​கிறது. ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் அதிதீ​விர தாக்குதல் நடத்​தப்​பட்​டு, ஈரான் ராணுவத்​தின் அச்​சுறுத்தல்​கள் முறியடிக்​கப்​படும். அங்கு தடையற்ற சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து உறுதி செய்​யப்​படும். மேலும் ஈரானின் கச்சா எண்​ணெய், எரி​வாயு ஏற்​றுமதி தளமான கார்க் தீவை கைப்​பற்ற திட்​ட​மிடப்​பட்டு இருக்​கிறது.

இதன் மூலம் ஈரானின் பொருளா​தா​ரம் முழு​மை​யாக முடக்​கப்​படும். இந்த தரைவழி போர் சில வாரங்​கள் வரை நீடிக்​கக்​கூடும். ஈரான் மீதான தரைவழி தாக்​குதலின்​போது அந்த நாட்​டிடம் உள்ள 400 கிலோ யுரேயனித்தை கைப்​பற்​ற​வும் திட்​ட​மிடப்​பட்டு இருக்​கிறது. இவ்​வாறு பென்​டகன் வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

ஈரான் நாடாளு​மன்ற சபா​நாயகர் முகமது பாகர் காலி​பாப் கூறும்​போது, “அமை​திப் பேச்​சு​வார்த்​தையை தொடங்கியிருப்​ப​தாக அமெரிக்கா வெளிப்​படை​யாக கூறி வரு​கிறது. ஆனால் அதே​நேரம் ஈரான் மீது ரகசி​ய​மாக தரைவழி தாக்​குதலை தொடங்க அந்த நாடு திட்​ட​மிட்டு இருக்​கிறது. அமெரிக்க வீரர்​கள் தரை​யில் கால் பதிக்​கும்​போது ஈரான்​ ராணுவ வீரர்​கள்​ தகுந்​த பதிலடி கொடுப்பார்கள்​. எங்​களது வீரர்​களும்​ ஏவு​கணை​களும்​ தயார்​ நிலையில்​ உள்​ளன” என்​று தெரிவித்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here