‘உபா’ சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை கோரி கையெழுத்து இயக்கம்: தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு தொடங்கியது

0
13

உபா சட்​டத்​தில் கைது செய்​யப்​பட்டு விசா​ரணை இன்றி சிறை வைக்​கப்​பட்​டுள்ள மாணவர்​களை விடு​தலை செய்ய கோரி, தமிழ்​நாடு சிறு​பான்மை மக்​கள் நலக்​குழு சார்​பில், கையெழுத்து இயக்​கம் தொடங்​கப்​பட்​டுள்​ளது.

சட்​ட​விரோத செயல்​பாடு தடுப்பு (உபா) சட்​டத்​தில் கைது செய்​யப்​பட்டு விசா​ரணை இன்றி சிறை வைக்​கப்​பட்​டுள்ள உமர் காலித், ஷார்​ஜீல் இமாம் ஆகியோரை விடு​தலை செய்ய கோரி​யும், வழக்​கு​களை ரத்து செய்ய கோரி​யும், தமிழ்​நாடு சிறு​பான்மை மக்​கள் நலக்​குழு சார்​பில், கையெழுத்து இயக்​கம் தொடக்க நிகழ்ச்சி சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில், குழு​வின் தலை​வர் நூர்​முகமது, தமிழ்​நாடு சிறு​பான்​மை​யினர் நல ஆணைய முன்​னாள் தலை​வர் பீட்​டர் அல்​போன்​ஸ், மனிதநேய மக்​கள் கட்​சி​யின் தலை​வர் ஜவாஹிருல்​லா, முன்​னாள் உயர்​நீ​தி​மன்ற நீதிபதி அக்​பர் அலி ஆகியோர் கலந்து கொண்​டனர்.

இது குறித்​து, அவர்​கள் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: குடி​யுரிமை திருத்​தச் சட்​டத்​துக்கு எதி​ராக இந்​தி​யா​வில் மிகப் பெரிய போராட்​டங்​கள் தொடர்ச்​சி​யாக நடை​பெற்​றது.

இந்​நிலை​யில், 2020-ம் ஆண்டு டெல்​லி​யில் நடை​பெற்ற போராட்​டத்​தில் திடீரென வன்​முறை வெடித்​தது. இந்த வன்​முறை சம்​பவத்​துக்கு காரண​மானவர்​கள் என கூறி, பல்​கலைக்​கழக மாணவர்கள் உமர் காலித், ஷார்​ஜீல் இமாம் ஆகியோர் உபா சட்​டத்​தில் கைது செய்​யப்​பட்​டனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி இந்தக் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here