மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல் நடத்தவில்லை: அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

0
19

‘மாற்​றுத் திற​னாளி​கள் போராட்​டத்​தின்​போது காவல்​ துறை தாக்​குதல் நடத்​த​வில்​லை’ என்று அமைச்​சர் எ.வ.வேலு விளக்​கம் அளித்​தார். தமிழக சட்​டப்​பேர​வை​யில் இடைக்​கால பட்​ஜெட் மீதான நேற்​றைய விவாதத்​தில் மார்க்​சிஸ்ட் உறுப்​பினர் எம்​.சின்​னதுரை பேசும்​போது, “மாற்​றுத் திற​னாளி​கள் மாதாந்​திர உதவித் தொகையை ரூ.1,500-ல் இருந்து ரூ.6 ஆயிர​மாக உயர்த்த வேண்​டுமென அரசிடம் கோரிக்கை வைத்து வரு​கிறார்​கள்.

இதை வலி​யுறுத்தி அவர்​கள் போராட்​டம் நடத்​தி​ய​போது காவல்​துறை மேற்​கொண்ட நடவடிக்கை கண்​டிக்​கத்​தக்​கது. குறிப்​பாக இந்த அமைப்​பின் பொதுச் செய​லா​ளர் பா.ஜான்​சி​ராணியை காவல்​துறை நடத்​திய விதம் ஏற்​புடையதல்ல. மேலும், மாற்​றுத் திற​னாளி​கள் கோரிக்​கையை நிறைவேற்​று​வதற்கு அரசு உரிய கவனம் செலுத்த வேண்​டும்” என்​றார்.

இதற்​குப் பதிலளித்து அமைச்​சர் எ.வ.வேலு பேசும்​போது, “மாற்​றுத் திற​னாளி​களின் கோரிக்​கைகளை திமுக​தான் கனிவோடு பரிசீலித்து நிறைவேற்​றித் தரு​கிறது. சென்​னை​யில் மாற்​றுத் திற​னாளி​கள் சங்​கத்​தினர் போராட்​டம் நடத்​தி​ய​போது போக்​கு​வரத்​துக்கு இடையூறு ஏற்​பட்​டது.

இத்​தகைய சந்​தர்ப்​பங்​களில் காவல்​துறை அந்த இடத்​தில் இருந்து போராட்​டக் குழுவை அப்​புறப்​படுத்​தும்​போது சில சம்​பவங்​கள் நடப்​பது தவிர்க்க முடி​யாதது. ஜான்​சி​ராணி மீது காவல்​துறை தாக்​குதல் நடத்​த​வில்​லை.

அவரே தவறி விழுந்​து​விட்​டார். உடனே அவரை மருத்​து​வ​மனைக்கு கொண்​டு​வந்து சிகிச்சை அளித்​தது காவல்​துறை​யினர்​தான். இதில் வேறு எந்த உள்​நோக்​க​மும் இல்​லை. மேலும், இந்​தப் போராட்​டத்தை முடிவுக்கு கொண்​டுவர பேச்​சு​வார்த்தை நடத்​து​வதற்கு முதல்​வர் அறி​வுறுத்​தி​யதன் பேரில் அமைச்​சர் கீதா ஜீவன், சங்​கத் தலை​வர்​களை நேரில் சந்​தித்து பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.

நடை​பெறவுள்ள சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக வெற்றி பெற்று மீண்​டும் ஆட்​சிக்கு வந்​ததும் முதல் பணி​யாக மாற்​றுத் திற​னாளி​கள் கோரிக்கை நிறைவேற்​றப்​படும் எனக் கூறி போ​ராட்​டம்​ முடிவுக்​கு கொண்​டு​வரப்​பட்​டது” என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here