‘வைகை’, ‘தீர்க்கதரிசி’ படங்களை இயக்கிய எல்.ஆர்.சுந்தரபாண்டி அடுத்து இயக்கியுள்ள படம், ‘4த் ஃப்ளோர்’. ஆரி ஆர்ஜுனன், தீப்ஷிகா, பவித்ரா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் உள்பட பலர் நடித்துள்ளனர். மனோ கிரியேஷன் சார்பில் ஏ. ராஜா தயாரித்துள்ளார்.
ஜே.லக் ஷ்மண் ஒளிப்பதிவு செய்துள்ளார். தரண்குமார் இசையமைத்துள்ள இப்படம் பிப்.27-ல் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர்கள் சேரன், சுசீந்திரன், விஜய் மில்டன், சுப்பிரமணியம் சிவா, நடிகர்கள் பரத், பிரஜின், தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
படத்தின் இயக்குநர் எல்.ஆர்.சுந்தரபாண்டி பேசும் போது, “இப்படத்தின் கதையை ஒரே ஜானருக்குள் அடக்க முடியாது. முதலில் கேட்கும்போது இது ஹாரர் மாதிரி தோன்றலாம்; அடுத்த நிமிடம் த்ரில்லராக மாறும். அதற்குள் காமெடியும் கலந்து வரும். அதனால் ‘இது என்ன ஜானர்?’ என்று கேட்டால், ஒரே வார்த்தையில் சொல்ல முடியாத படம்” என்றார்.














