ஜாக்டோ-ஜியோ சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி அறிவிப்பு விழா

0
50

ஜாக்​டோ-ஜியோ கூட்​டமைப்பு சார்​பில் உரிமை மீட்பு மாநாடு என்ற பெயரில், தமிழக முதல்​வருக்​கு பிப்.8-ம் தேதி நன்றி அறிவிப்பு விழா நடை​பெறுகிறது.

ஜாக்​டோ-ஜியோ மாநில ஒருங்​கிணைப்​பாளர்​கள் மற்​றும் உயர்​நிலைக்​குழு உறுப்​பினர்​கள் ஆலோ​சனை கூட்​டம் வெ.சோமசுந்​தரம், இரா.​தாஸ், எஸ்​.​ஞான​சேகரன் ஆகியோரின் தலை​மை​யில் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

அரசு ஊழியர்​களுக்கு உத்​தர​வாதப்​படுத்​தப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை (TAPS) தமிழக முதல்​வர் ஜன. 3-ம் தேதி அறி​வித்​தைத் தொடர்ந்​து, சென்னை ஒய்​எம்​சிஏ விளை​யாட்டு மைதானத்​தில் பிப்​.8-ம் தேதி லட்​சக்​கணக்​கான அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள் பங்​கேற்​கும் வகை​யில் உரிமை மீட்பு மாநாட்டை நடத்த முடிவு செய்​யப்​பட்​டது.

இதற்​காக, வரும் 31-ம் தேதி அன்று மாவட்​டங்​களில் வட்ட, மாவட்ட ஒருங்​கிணைப்​பாளர் கூட்​டத்தை கூட்​ட​வும், பிப். 2, 3, 4-ம் தேதி​களில் மாவட்​டங்​களில் நடை​பெறும் பிரச்​சா​ரத்​தில் பங்​கேற்​பது என்​றும், மாநாட்டை சிறப்​பாக நடத்த 10 குழுக்​கள் அமைப்​பது என்​றும் முடி​வெடுக்​கப்​பட்​ட​தாக ஜாக்​டோ-ஜியோ அறி​வித்​துள்​ளது​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here