கீழ்குளம் பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் (60) என்பவர் வீட்டில் ஏற்பட்ட தகராறில், அவரது அண்ணன் கோலப்பன் மகன் விஷ்ணு, தந்தை கோலப்பனை அடிக்கச் சென்றுள்ளார். இதைத் தடுக்க முயன்ற சித்தப்பா மகேஸ்வரனை விஷ்ணு தலையில் அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.














