“காசியிலும் தமிழ் இலக்கியங்கள் ஓங்கி ஒலிக்கின்றன” – குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பெருமிதம்

0
25

காசி ஆன்​மிகத் தலைநக​ராக இருந்​தா​லும் தமிழ் இலக்​கி​யங்​கள் அங்கு ஓங்கி ஒலிக்​கின்றன என்று குடியரசு துணைத் தலை​வர் சி.பி ராதாகிருஷ்ணன் கூறி​னார். உத்தர பிரதேச மாநிலம் வாராணசி​யில் ‘காசி தமிழ் சங்​கமம் நிகழ்ச்​சி-4.0 டிச. 2 முதல் 15-ம் தேதி வரை நடை​பெற்​றது.

இதன் நிறைவு விழா ராமேசுவரத்​தில் நேற்று நடந்​தது. இதில், குடியரசு துணைத் தலை​வர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசி​ய​தாவது: முன்​னாள் குடியரசுத் தலை​வர் அப்​துல் கலாமை தந்த புண்​ணிய பூமி​யான ராமேசுவரத்​தில் காசி தமிழ் சங்​கமம் நிறைவு விழாவைக் கொண்​டாடு​வது பெரு​மைக்​குரியது. காசி ஆன்​மிகத் தலைநக​ராக இருந்​தா​லும், நாலடி​யார், தேவாரம், திரு​வாசகம், கபிலரின் பக்​திப் பாடல்​கள் என தமிழ் இலக்​கி​யங்​கள் அங்கே ஒலிக்​கின்​றன.

முகலாய மன்​னர்​கள் காசி ஆலயத்தை அழித்​த​போது தமிழகத்​திலிருந்து (பாண்​டிய நாடு) பெருந்​திரளான வீரர்​கள் அந்த மகத்​தான புண்​ணிய பூமியை மீட்​டெடுக்​கச் சென்​றார்​கள். நாட்​டின் எந்த மூலை​யில் நமது தர்​மத்​துக்​கும், நாட்​டின் தன்​மானத்​துக்கும் இழுக்கு ஏற்​பட்​டால் அனை​வரும் ஒருங்​கிணைந்து போராட வேண்​டும்.

மகாகவி பாரதி காசிக்கு சென்​றது மட்​டுமின்​றி, காசி அமைச்​சரமை​யில் புல​வ​னாக​வும் இருந்து தமிழர்​களுக்​குப் பெருமை சேர்த்​துள்​ளார். பாரதி கண்ட கனவை நனவாக்​கும் வகை​யில், பிரதமர் மோடி தனது தொலைநோக்​குத் திட்​டங்​களைச் செயல்​படுத்தி வரு​கிறார். இவ்​வாறு சி.பி.​ரா​தாகிருஷ்ணன் பேசி​னார்.

ஆளுநர் ஆர்​.என் ரவி பேசும்​போது, “நடப்​பாண்டு காசி தமிழ் சங்​கமம் ‘தமிழ் கற்​கலாம்’ என்ற கருப்​பொருளில் நடை​பெற்​றது. நாட்​டின் பல்​வேறு பகு​தி​களைச் சேர்ந்த ஆயிரக்​கணக்​கான மாணவர்​கள் தமிழ் கற்​கின்​றனர். தமிழ் மொழி​யின் பண்​பாட்​டுக்​கும், கலாச்​சா​ரத்​துக்​கும், வளர்ச்​சிக்​கும் பிரதமர் மோடியைப் போல வேறு யாரும் செய்​த​தில்​லை.

இதற்​காக அவருக்கு நன்றி தெரி​வித்​துக் கொள்​கிறேன்” என்​றார் மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பேசும்​போது, “காசி தமிழ் சங்​கமம் 4.0 மூலம் அனை​வரும் தமிழ் கற்​ப​தற்​கான வாய்ப்பு ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது. பார​தி​யாரின் கனவை பிரதமர் மோடி காசி தமிழ் சங்​கமம் மூலம் நிறைவேற்​றி​யுள்​ளார்” என்​றார்.

மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன் பேசும்​போது, “காசிக்​கும், தமிழகத்​துக்​கும் பல நூறு ஆண்டு பந்​தம் தொடர்​கிறது. காசி​யில் இருப்​போர் ராமேசுவரம் செல்​ல​வும், ராமேசுவரத்​தில் இருப்​போர் காசி செல்​ல​வும் காசி தமிழ் சங்​கமம் நிகழ்ச்சி உதவு​கிறது” என்​றார்.

நிகழ்ச்​சி​யில் 5,000-க்​கும் மேற்​பட்​டோர் கலந்​து​கொண்​டனர். 700 போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். முன்​ன​தாக, மண்​டபம் ஹெலிபேடில் குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணனை தமிழக அரசு சார்​பில் அமைச்​சர் கே.ஆர்​.பெரிய கருப்​பன் வரவேற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here