தைப்பூச விழாவையொட்டி, மேல்மருவத்தூரில் 28 விரைவு ரயில்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக நிறுத்தம், பிப்.2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் மேல்மருவத்தூருக்கு வருவார்கள்.
அவர்களின் வசதிக்காக, மேல்மருவத்தூர் வழியாக இயக்கப்படும் விரைவு ரயில்கள், தற்காலிகமாக அந்த நிலையத்தில் நின்று செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, லோக்மானிய திலக் – காரைக்கால், எழும்பூர் – மதுரை வைகை, எழும்பூர் – மதுரை பாண்டியன், கன்னியாகுமரி – நிஜாமுதீன், மதுரை – நிஜாமுதீன், எழும்பூர் – திருச்சி மலைக்கோட்டை, எழும்பூர் – செங்கோட்டை பொதிகை, எழும்பூர் – கொல்லம், எழும்பூர் – நாகர்கோவில், எழும்பூர் – மன்னார்குடி, தாம்பரம் – ராமேசுவரம், எழும்பூர் – உழவன், தாம்பரம் – செங்கோட்டை சிலம்பு, எழும்பூர் – சேலம் உட்பட 28 விரைவு ரயில்கள் இருமார்க்கத்திலும் மேல்மருவத்தூரில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.
இந்த 28 விரைவு ரயில்களுக்கும் பிப்.2-ம் தேதி வரை மேல்மருவத்தூரில் தற்காலிக நிறுத்தம் நீட்டித்து வழங்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.



