திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 30-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் இணையத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்டு விட்டன.
இந்நிலையில், வரும் 23-ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம், 29-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 8-ம் தேதி வரையிலும், மற்றும் ஜனவரி 25-ம் தேதி ரதசப்தமி போன்ற நாட்களில் விஐபி பிரேக் தரிசனத்திற்கான சிபாரிசு கடிதங்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.







